முஸ்லிம்கள் மற்றும் அனைத்து சமூக மக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் நிலை நிறுத்தும் வகையில் சமூக நீதியை நிலை நாட்டிட பாடுபடுவது.
சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், போராடுவதும் தமுமுகவின் லட்சியமாகும், அந்த வகையில் வரதட்சணை, வட்டி, ஆபாசம், சூதாட்டம், ஊழல், மது, போதப் பொருட்கள், வக்கிர சினிமா, அழகிப்போட்டி போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்காக அந்தந்த தலைப்புகளில் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்துவது.
வன்முறையைத் தவிர்த்த அறவழிப் போராட்ட வழிமுறைகளையும் , அதன் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி இளைய சமுதாயத்தை ஓர் இலட்சியமிக்க சமுதாயமாக மாற்றுவது.
நாட்டில் சாதி, மதக் கலவரங்கள் ஏற்படாமல் தடுப்பது : நாட்டு மக்களிடையே சமூக நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையையும் ஏற்படுத்தப் பாடுபடுவது.
பிற சமுதாய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அவர்களது நீதிக்காகவும் , உரிமைக்காகவும் குரல் கொடுப்பது.
கலவரங்கள் , பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் அனைத்து சமுதாய மக்களுக்கும் மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வது.