முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 6வது வீடாகிய சோலைமலை முருகன் திருக்கோவில் பற்றி அறியலாம்.
மதுரையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் திருக்கோவில் மீது உள்ள மலையில் 3 கிலோ மீட்டர் வெகு அழகான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள திவ்யமான திருத்தலம் ஆகும். இங்கு மட்டுமே அறுபடை வீடுகளில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கு வேலுக்கு மட்டும் தனி சன்னதி உள்ளது.
மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வைப் பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய உன்னதமான தலம் இதுவாகும். இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.