கட்டமைக்கப்படாத கல்வி முறையினால் ஏற்பட்ட பல தொடர்ச்சியான காயங்களால் உருவான ஒரு நிறுவனம் வினைஞன் கல்வி கழகம்.
பொருளாதார அடிப்படையில் கிராமங்களை ஒதுக்கி வைத்ததன் விளைவு நகரங்களுக்கு இணையான கல்வி மற்றும் அதற்கான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போனது கிராமப்புற குழந்தைகளுக்கு.
கல்வி வசதி நன்கு இருந்தாலும் ஒழுங்கு முறைப்படுத்தப் படாத கல்வியினால் நோக்கமற்று பயனளிக்காமல் உள்ளது நகர்ப்புற கல்வி.
எங்கே தவறு நடந்தது? ஒரு ஒட்டு மொத்த தலைமுறையின் தோல்வியாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
மதிப்பெண்ணிற்கு ஏன் இவ்வளவு மதிப்பு இங்கே?
இவையெல்லாம் யாருடைய பிழை?
கேள்வி கேட்க ஆள் இல்லாத நிலையில் கார்ப்பரேட் கல்விக்கு அனுமதி அளித்து நாம் அடிமையாகி உள்ளோம்.
இதன் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காணும் விதமாக பல புரட்சிகரமான செயல்களில் ஈடுபட வேண்டிய நோக்கத்தோடு மாணவர்களுடன் கைகோர்த்து செயல்வினை ஆற்றுகிறது வினைஞன் கல்வி கழகம்.